புதுக்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை என பதாகை வைக்கப்பட்டுள்ளது.
இந்து மதத்தை சாராதவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அதனை ரத்து செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. அதேசமயம் உணவிற்கு மதமில்லை என Zomato நிறுவனம் பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் மூன்று இடங்களில் உணவகம் மற்றும் காபி பார் நடத்தி வரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அருண்மொழி என்பவர் தனது உணவகம் மற்றும் காபி பாரில் மதம் பார்ப்பவர்களுக்கு உணவு இல்லை என்று விளம்பரப் பலகை வைத்து வியப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவரது முகநூலிலும் பதிவிட்டுள்ள அருண்மொழி, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் உணவு என்றும் அதில் மதம் பார்ப்பது என்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அதை கண்டிக்கும் வகையிலேயே தனது உணவகத்தில் மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை என விளம்பரம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அருள்மொழி வைத்துள்ள இந்த விளம்பர பதாகை அங்கு வரும் வாடிக்கையாளர்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. அருண்மொழியின் இந்த முயற்சி போற்றுதலுக்கு உரியது என்றும் இதேபோல் அனைத்து உணவகத்திலும் விளம்பரப் பதாகைகள் வைத்தால் இந்தியாவில் ஜாதி மத பாகுபாடே இருக்காது என்றும் பலர் கூறுகின்றனர்.
இந்து மதத்தை சாராதவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அதனை ரத்து செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. அதேசமயம் உணவிற்கு மதமில்லை என Zomato நிறுவனம் பதிலடி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் புதுக்கோட்டையில் மூன்று இடங்களில் உணவகம் மற்றும் காபி பார் நடத்தி வரும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அருண்மொழி என்பவர் தனது உணவகம் மற்றும் காபி பாரில் மதம் பார்ப்பவர்களுக்கு உணவு இல்லை என்று விளம்பரப் பலகை வைத்து வியப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவரது முகநூலிலும் பதிவிட்டுள்ள அருண்மொழி, ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது தான் உணவு என்றும் அதில் மதம் பார்ப்பது என்பது கண்டனத்துக்கு உரியது என்றும் அதை கண்டிக்கும் வகையிலேயே தனது உணவகத்தில் மதம் பார்ப்பவர்களுக்கு சாப்பாடு இல்லை என விளம்பரம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
அருள்மொழி வைத்துள்ள இந்த விளம்பர பதாகை அங்கு வரும் வாடிக்கையாளர்களின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. அருண்மொழியின் இந்த முயற்சி போற்றுதலுக்கு உரியது என்றும் இதேபோல் அனைத்து உணவகத்திலும் விளம்பரப் பதாகைகள் வைத்தால் இந்தியாவில் ஜாதி மத பாகுபாடே இருக்காது என்றும் பலர் கூறுகின்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.