ஊரைப்பற்றி




கோபாலப்பட்டினம் சில அடிப்படை தகவல்கள்:


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையர்கோயில்  தாலுகாவில் அமைந்துள்ள ஒரு இயற்கை எழில்  நிறைந்த கிராமம்  கோபாலப்பட்டினம்  ஆகும்
முஸ்லிம்கள் அதிகமாக வாழும் இந்த கிராமத்தின் பிரதான தொழில்மீன்பிடிதொழில் ஆகும் . கோபாலப்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 75.12% ஆகும். 
தமிழ் மொழிக்கு அடுத்ததாக மக்களால் அதிகம் பேசப்படும் மொழியாக மலேசிய மொழியான மலாய் இருக்கிறது. திருச்சிராப்பள்ளி விமான நிலையம் இங்கிருந்து 120 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இக்கிராமத்திலிருந்து பெரும்பான்மையான பேர்கள் மலேசியாசிங்கப்பூர் ,சவுதி மற்றும்அரபு நாடுகளில் வசிக்கிறார்கள்.

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு நூலகமும்,

இஸ்லாமிய நூலகம்இயங்கி வருகிறது.

மேலும் உடல்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது .

ஜமாஅத் கௌரவத் தலைவராக ஹாஜி K.M.S.J. சேகுநூர்தீன் அவர்களும்,
தலைவராக ஜனாப் O.S.M.முகமது அலி ஜின்னா அவர்களும்,
துணைதலைவராக ஜனாப் R.M.A.சேக் முகமதுஅவர்களும்,  
செயலாளராக ஜனாப் E.M.A.சௌக்கத் அலிஅவர்களும், 
பொருளாளராக  ஹாஜி.K.M.முகம்மது ஹீசைன்அவர்களும் 
கணக்கு பிள்ளையாக ஜனாப் S.S.A. ஜகுபர் அலி அவர்களும் இருக்கிறார்கள்.
      இதன் தற்போதைய ஊராட்சி மன்றத்தலைவராக  
திரு.M.K.R.M. முகம்மது மீராசா உள்ளார் ,
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு   J.K.ரித்தீஸ் (தி.மு.க 
அவர்கள்.
சட்டமன்ற உறுப்பினர் திரு M.ராஜா நாயகம் (அ.தி.மு.அவர்கள்.


ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் கீழும்,

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் கீழும் உள்ளது .

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,
அரசு உயர்நிலைப்பள்ளி போன்றவைகள் அரசு சார்பிலும்,
பாபுலர் மற்றும் சங்கீத் தனியார்  சார்பிலும் இயங்கிவருகிறது.
மேலும்,  AIRCEL அலைபேசி கோபுராமும் இங்குள்ளது.
1 கி.மீ தொலைவில் உள்ள மீமிசலில் 

மத்திய அரசு நிறுவனங்களான பாரத ஸ்டேட் பாங்கும்,

தொலைபேசி இணைப்பகமும் உள்ளது.
பகுதி நேரமாக இயங்கக்கூடிய ஒரு அரசு மருத்துவமனையும் உள்ளது.
மேலும்AIRCEL, VODAFONE, BSNL, RELAINCE, AIRTEL, IDEA  போன்ற அலைபேசி கோபுரங்களும் இங்குள்ளது.
இந்த ஊர், ஜெகதாப்பட்டினம்  காவல் நிலைய எல்லைக்குள்ளும்,
S.Pபட்டினம்  எல்லைக்குள்ளும் வருகிறது.

Post a Comment