இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொது செயலாளர் முஹம்மது சித்திக் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
டெல்லி நிஜாமுதீன் மர்க்கஸில் மார்ச் 10 ம்தேதி முதல் தப்லிக் ஜமாஅத் மாநாடு நடைபெற்றது இது வருடம் வருடம் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வு இந்த நிகழ்வில் பல்வேறு பகுதிகளில் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதே போல் மார்ச் மாதத்தில் ஈஷா யோக மையத்தின் சார்பாக பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது அதில் பல நாடுகள் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மார்ச் மாதத்தில் இந்திய நாட்டின் பிரதமர் அமெரிக்கா அதிபர் கலந்து கொண்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
மார்ச் மாதத்தில் இந்திய பிரதமர் ஊரடங்கு உத்தரவு பிறபித்த அன்று மார்ச் 22 உபி முதலமைச்சர் யோகி கலந்து கொண்ட ராம நவமி கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
ஊரடங்கு உத்தரவு பிறபித்த அன்றே பிரதமர் சொன்ன விசயத்தை தவறாக புரிந்து கொண்ட வட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் வந்தனர்.
இந்த கூட்டங்கள் அனைத்திலும் மக்கள் ஊரடங்கு மற்றும் கொரோனா குறித்து தெரிந்த பிறகு கூடியது எல்லாம் எந்த ஊடகங்கள் பேசாமல் அரசும் ஊடகங்கள் திட்டமிட்டு நிஜாமுதீன் மர்க்கஸ் இஸ்திமா குறித்து மட்டும் பேசுவது கொரோனா வைத்து மத சாயம் பூச சதி நடக்கிறது என்பதை உறுதி செய்வதாக இருக்கிறது.
தமிழ் நாட்டிலும் பல பேர் வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு அவர்கள் குறித்தே இதுவரை எந்த உறுதியான கொரோனா மருத்துவ பரிசோதனைகள் வராத போது.டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு இது வரை எந்த நோய் தொற்று உறுதி செய்யப்படாத நேரத்தில் தமிழக முதல்வர் அவர்களும் பேட்டியில் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் இருந்து வந்தவர்கள் மூலமாக கொரோனா பரவ வாய்ப்பு இருக்கிறது என்பது ஒரு குறிப்பிட்ட சமூதாயம் மீது ஊடகங்கள் சொல்லும் பொய்யான கூற்றுக்கு வலு சேர்க்கும் விதத்தில் பேட்டி இருப்பதால் அரசும் உடனடியாக இது குறித்து முழு விளக்கம் அளிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.
ஊடகங்கள் உண்மை நிலையை ஆராயாமல் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியிடுவது கண்டிக்கதக்கது.
டெல்லி நிஜாமுதீன் மர்க்கஸ் இஸ்திமாவில் கலந்து கொண்டவர்கள் தமிழக முழுவதும் 99 சதவீதம் பேர் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி மருத்துவ பரிசோதனை நடைபெற்று கொண்டு இருக்கும் போது திட்டமிட்டு செய்திகளை பரப்புவதை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.