துருக்கியின் மேற்கு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில், சுமார் 91 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இடிபாடுகளிலிருந்து மூன்று வயது சிறுமி ஒருவர் உயிரோடு மீட்டெடுக்கப்பட்டுள்ளார்.
உற்றார் உறவினரின் இறப்பு சம்பவங்கள் அந்த பகுதியில் மரண பலத்தை ஏற்படுத்திய நிலையில் சுமார் 3 நாட்களுக்கு பிறகு அந்த சிறுமி மீட்கப்பட்டுள்ளார்.
அது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள படை வீரர்கள் மற்றும் மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பலரும் அந்த சிறுமியை அதிசயம் என சமூக வலைத்தளங்களில் டேக் செய்து வந்த நிலையில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் அந்த அதிசயத்தின் பெயர் அய்டாஎன தெரிவித்தார்.
நாங்கள் மிகவும் சோர்வாக இருந்தோம். இளைப்பாற அமர்ந்திருந்த போது தான் ஒரு சிறுமியின் அழுகுரல் எங்கள் காதுகளில் கேட்டது. உடனடியாக அந்த குரல் வந்த திசையை நோக்கி நாங்கள் இருவரும் நகர்ந்தோம். ஒரு சமயலறையில் கை மட்டும் தெரிந்தது. தொடர்ந்து இடிபாடுகளை அகற்றிய போது குழந்தையின் முகத்தை கண்டோம். உடனடியாக ஒரு நொடி கூட தாமதிக்காமல் அவளை மீட்டோம் என சொல்கின்றனர் சிறுமியை மீட்ட இப்ராஹிம் மற்றும் அஹமத்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.