கீழக்கரையைச் சேர்ந்த இளைஞர் சேகு சதக் இப்ராஹிம் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு வளைகுடாவில் விமான நிலையத்தில் பொறியாளராக பணியாற்றினார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் கீழக்கரை திரும்பினார். இவர் தற்போது ஆடைகளை இஸ்திரி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொழிலை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது:-
துபாய் விமான நிலையத்தில் வேலை பார்த்தேன். கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் அங்குள்ள பணியாளர்களை குறைத்து விட்டனர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர் திரும்பி விட்டேன். அதன் பின்னர் ஏதேனும் தொழில் தொடங்க ஆர்வமாக இருந்தேன். பல்வேறு தொழில்களை தேர்வு செய்து இறுதியில் ஆடைகளை இஸ்திரி செய்யக்கூடிய கடையை திறந்து உள்ளேன். தற்போது பெரும்பாலான மக்கள் விலை உயர்ந்த ஆடைகளை அணிகின்றனர். கடந்த காலங்களை போல் ஆடைகளை கரி பெட்டியின் மூலம் இஸ்திரி செய்ய முடியாது. இதைத் தொடர்ந்து சென்னைக்கு சென்று நவீன எந்திரம் மூலம் இஸ்திரி செய்யும் முறையை கற்றுக் கொண்டு வந்தேன். இதில் படிப்பு என்பதை பின்னுக்கு தள்ளிவிட்டு தொழில் என்பதை முன்னிலைப்படுத்தி உள்ளேன். ஏராளமானோர் நேரிலும், போனிலும் வாழ்த்து தெரிவித்து வருவது பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.