புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களை நவீனப்பத்தி சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை மன்னர்கள் ஆட்சி செய்ததால் மிக பழமையான சுற்றுலா தளங்கள் உள்ளது. சித்தன்னவாசல், திருமயம், குடியியான்மலை, விராலிமலை, புதுக்கோட்டை அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. இந்த சுற்றுலா தளங்கள் மிகவும் பழமையானவைகளில் ஒன்று. குறிப்பாக சித்தன்னவாசலில் உள்ள குகை ஓவியங்கள் மிகவும் பழமையான பிரசித்தி பெற்றது.
இந்த சுற்றுலா தளத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தினசரி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் குடிநீர், கழிப்பறை மற்றும் காத்திருக்கும் அரை உள்ளிட்ட போதிய அடிப்டை வசதிகள் இல்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் சில சிரமங்களை அனுபவிக்கின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் அடிப்படை வசதிகளை செய்து தகுந்த முறையில் மேம்படுத்தி சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.