மரண அறிவித்தல்: (மாயாகுளம் கீழக்கரை அருகில்) கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் முன்னாள் இமாம் ஈஷா காஷிபி அவர்கள்...



கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பள்ளிவாசல் இமாம் கலில் ரகுமான் அவர்களின் மச்சானும், கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் பள்ளிவாசலில் நீண்ட காலமாக இமாமாக பணிபுரிந்து, பிறகு தற்பொழுது நம்புதாளை ஸபீலுல் உலூம் அரபிக் கல்லூரியில் துணை ஆசிரியராக பணிபுரிந்து வந்த மாயாகுளத்தை சேர்ந்த  இமாம் ஈஷா காஷிபி அவர்கள்  இன்று 06-02-2020 சனிக்கிழமை சொந்த ஊரான மாயாகுளத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (07-02-2021) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் இராமாநாதபுரம் மாவட்டம் கீழக்கரை-ஏர்வாடி இடையே உள்ள மாயாகுளம் மையாவடியில்  நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 ஜனாஸா இருப்பிடம்:   
அன்னாரின் இல்லம், மாயாகுளம் (கீழக்கரை-ஏர்வாடி சாலை) இராமாநாதபுரம் மாவட்டம்.  

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments