கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில், கலை அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர பிற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதாக இருந்தது
இதற்கிடையே அரியர் தேர்வு ரத்து என்பது அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆகியவற்றின் விதிகளுக்கு முரணானது என்று ஏஐசிடிஇ எதிர்ப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கான பொறியியல் தேர்வுக் கால அட்டவணையை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. முதல்கட்டமான அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி,
சென்னை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் கல்லூரிக்கான அரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தேர்வுகள் பிப்ரவரி 9-ம் தேதி தொடங்குகின்றன. பிற பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையான அரியர் தேர்வுக் கால அட்டவணையைக் காண: https://acoe.annauniv.edu/Home/ug_tt
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.