கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி 4 பேருக்கு மயக்க ஊசி செலுத்தி 30 பவுன் நகையை கொள்ளையடித்த உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள லக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 49). இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தை ஆதிமூலத்தை சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை முடிந்ததும் 11-ந் தேதி தந்தையை அழைத்து கொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டார்.
அப்போது தொழுதூர் பஸ் நிறுத்தத்தில் உறவுக்கார பெண்ணான பெரம்பலூர் மாவட்டம் கீழக்குடிக்காட்டை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி சத்தியப்பிரியா(26) நின்றிருந்தார்.
இவரை கண்ட கிருஷ்ணமூர்த்தி, ஆட்டோவை நிறுத்துமாறு கூறினார். உடனே அவர், சத்தியப்பிரியாவிடம் எதற்காக இங்கே நிற்கிறாய் என்று கேட்டார். அதற்கு சத்தியப்பிரியா, மங்களூரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு செல்ல பஸ்சுக்காக வெகுநேரமாக காத்திருப்பதாகவும், லக்கூர் அருகில் மங்களூர் இருப்பதால் தன்னையும் ஆட்டோவில் அழைத்துச்செல்லுமாறு கூறினார். உடனே அவரையும் ஆட்டோவில் அழைத்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த தனது உறவினர்களிடம் நலம் விசாரித்த சத்தியப்பிரியா, இன்று ஒரு நாள் மட்டும் இங்கு தங்கி விட்டு காலையில் சொந்த ஊருக்கு செல்கிறேன் என்று கூறினார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். இதற்கிடையில் வேலை சம்பந்தமாக கிருஷ்ணமூர்த்தி வெளியே சென்று விட்டார்.
வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராஜாத்தி (40), மகள்கள் கீர்த்திகா(20), மோனிகா(18) ஆகியோரிடம் சத்தியப்பிரியா எனக்கு நர்சு ஒருவரிடம் பழக்கம் உண்டு. அவர் மூலம் ஊசி போட கற்றுக்கொண்டேன்.
தற்போது தன்னிடம் கொரோனா தடுப்பூசி உள்ளது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டால் கொரோனா நோய் வராது என்று கூறினார். இது உண்மை என்று நம்பிய 3 பேரும் கொரோனா தடுப்பூசி போட ஒப்புக்கொண்டனர். இதையடுத்து ராஜாத்தி உள்ளிட்ட 3 பேருக்கும் சத்தியப்பிரியா ஊசி போட்டார். சில நிமிடங்களில் அவர்கள் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
இதற்கிடையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு வந்தார். அங்கு தனது மனைவி, மகள்கள் மயங்கி கிடப்பது குறித்து சத்தியப்பிரியாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், 3 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளேன். இதனால் அவர்கள் தூங்கி விட்டனர். காலையில் சரியாகிவிடும், பயப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து கிருஷ்ணமூர்த்திக்கும் ஊசி செலுத்தியதால் அவரும் மயங்கி விழுந்தார்.
நேற்று முன்தினம் காலையில் கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் எழுந்து பார்த்தனர். அப்போது ராஜாத்தி, கீர்த்திகா, மோனிகா ஆகியோர் கழுத்தில் கிடந்த நகைகளை காணவில்லை. வீட்டில் இருந்த சத்தியப்பிரியாவும் இல்லை.
அதன்பின்னர் தான் கொரோனா தடுப்பூசி போடுவதாக கூறி, மயக்க ஊசி செலுத்தி ராஜாத்தி, கீர்த்திகா, மோனிகா ஆகியோரிடம் இருந்த 30 பவுன் நகையை சத்தியப்பிரியா கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்களூருவில் இருந்த சத்தியப்பிரியாவை கைது செய்தனர். அவரிடம் இருந்த 30 பவுன் நகை மீட்கப்பட்டது. அவர் எதற்காக நகையை கொள்ளையடித்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.