அறந்தாங்கி தொகுதியை மேம்படுத்த சிறந்த வேட்பாளரை தேர்வு செய்ய ஒரு விரல் புரட்சி செய்வோம்!!!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மீமிசல் அருகில் உள்ள நாட்டாணிபுரசக்குடியை சேர்ந்த கோபாலப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 06/04/2021 செவ்வாய்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை சட்டபேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது.

அடுத்த ஐந்தாண்டுகள் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக பணியாற்றக்கூடிய சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய மிக முக்கிய ‘ஒரு விரல் புரட்சி’ செய்யும் நாள் நாளை (ஏப்ரல்.6). ஒவ்வொருவரும் மறக்காமல், எந்த வேலையாக இருந்தாலும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க தவறாதீர்கள்.

அதுசமயம் வாக்களிக்க தகுதி பெற்ற முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் மற்றும் ஒரு சில காரணங்களால் வாக்களிக்க தகுதி இருந்தும்  வெளிநாடுகளில் வாழ்க்கையை கழித்து தற்போது வாழ்க்கையில் முதல் முறையாக வாக்களிக்க கூடிய சகோதரர்கள், பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாக்களித்துவிட்டு உங்கள் ஒரு விரல் புரட்சியை எங்களுக்கு புகைப்படங்களாக எடுத்து அனுப்பி வையுங்கள். நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் அனைத்தும் எங்களது கோபாலப்பட்டிணம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த முயற்சியானது உள்நாட்டிலேயே இருந்து கொண்டு வாக்களிக்கத்தவர்களை ஆர்வம்முட்டும் வகையில் வரக்கூடிய தேர்தலில் வாக்களிக்க வைக்க ஒரு தூண்டுகோலாக இருக்கும்.

இவ்வாறு பதியப்படும் பதிவுகள் வரக்கூடிய இளைய தலைமுறைகள் பார்ப்பதற்கும் இவை அழியாத எப்போது வேண்டுமானாலும் பார்க்கக்கூடியதாக இருக்கும்.

குறிப்பு: இந்திய நேரப்படி மாலை 6.00 மணிக்குள் புகைப்படங்களை அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

நீங்கள் புகைப்படங்கள் அனுப்ப வேண்டிய வாட்ஸ்ஆப் எண்: wa.me/918270282723 (கிளிக்)

மற்றும் எங்கள் மீடியா வாட்ஸ்ஆப் குழும அட்மின்களுக்கும் அனுப்பி வைக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்புடன்...

GPM MEDIA TEAM
GOPALAPATTINAM
https://www.gopalappattinam.com

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments