தமிழக அரசின் சார்பில் புதுக்கோட்டையில் பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கு அரசு சிறப்புப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
பள்ளி பருவ மாணவர்கள் கண்பார்வையில் 40 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை குறைபாடு உடையவர்களாக இருந்தால் அவர்கள் இந்த சிறப்பு பள்ளியில் சேர்த்து இலவச கல்வி பெறலாம். இந்த மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.
பார்வை குறைபாடுடைய மாணவர்களுக்கு கல்வியோடு கணினியும் கற்றுத் தரப்படுகிறது. சத்தான உணவு, சீருடை, தங்கும் விடுதி அனைத்தும் இலவசமாக செய்து தரப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை கல்விச் சுற்றுலா, ஆண்டுக்கு ஒரு முறை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். விடுதியுடன் கூடிய சிறப்புப்பள்ளி. குழந்தைகளை பராமரிக்க விடுதி காப்பாளர், சமையலர் மற்றும் ஆயா ஆகியோர் உள்ளனர்.
பார்வை குறைபாடுடைய மாணவர்களை பள்ளியில் சேர 9840272383, 8610199787, 9789533963 என்ற செல்போனிலோ, 04322-226452 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், புதிய பஸ் நிலையம், புதுக்கோட்டை 622001 என்ற முகவரியில் அணுகலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கவிதா ராமு அவர்கள் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.