மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான இணையதளம் வாயிலான வினாடி வினாப் போட்டி




            மாநில அளவிலான சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான  இணையதளம் வாயிலான வினாடி வினாப் போட்டிகள்  (இன்று) 21.07.2022 அன்று நடைபெறவுள்ளது. என்று  மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 

 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை  மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளை பொதுமக்களிடையே கொண்டு  செல்லும் வகையில் மாவட்ட நிறுவாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டு வருகின்றன.


அதன்படி புதுக்கோட்டை மாவட்ட நிறுவாகத்தின் சார்பில் மாநில அளவிலான 
சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான வினாடி வினாப்போட்டிகள் இணையதளம் வாயிலாக 21.07.2022 அன்று மாலை 06.00 மணியளவில் முதல்சுற்று  போட்டிகள் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகம்  முழுவதும் உள்ள 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து பள்ளி  மாணவ, மாணவியர்களும் https://pudukkottai.nic.in/state-level-interschool-quiz  என்ற  இணையதளம் முகவரியில் பதிவு செய்து பங்கேற்கலாம். மேற்காணும் போட்டிகளில் வெற்றிபெறும் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த  5 நபர்களும், பிற மாவட்டங்களை சார்ந்த 5 நபர்களும் என மொத்தம் 10 நபர்கள்  தரவரிசையின் அடிப்படையில் இறுதிப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். 

தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நபர்கள் 24.07.2022 அன்று புதுக்கோட்டை அரசு  மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் நேரடியாக பங்கேற்று விளையாடவுள்ளனர்.  இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள்  வழங்கப்படுவதுடன், இறுதிப் போட்டியில் பங்கேற்க புதுக்கோட்டை வருகை தரும் வெளி  மாவட்ட வீரர், வீராங்கனைகளுக்கு மற்றும் உடன் வரும் பெரியவர் ஒருவருக்கு தூரத்தின்  அடிப்படையில் பயணப்படி வழங்கப்படும்.
எனவே சதுரங்கப் போட்டிகளில் விளையாட ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள்  அனைவரும் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொண்டோ அல்லது  https://pudukkottai.nic.in/state-level-interschool-quiz/  என்ற இணையதள முகவரியில்  நடைபெறும் போட்டியில் நேரடியாகவோ பங்கேற்கலாம். 

மேலும் இப்போட்டியில் சதுரங்கம் மற்றும் பிற விளையாட்டுகள் தொடர்பான 
30 வினாக்களுக்கு 15 நிமிடங்களில் விடையளிக்கும் வகையில் போட்டிகள் ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப.,  அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments