மணமேல்குடி ஒன்றியத்தில் நடைபெற்ற மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் முன் திட்டமிடல் பயிற்சி!



மணமேல்குடி ஒன்றியத்தில் மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் முன் திட்டமிடல் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வழிகாட்டுதலின் படி மணமேல்குடி ஒன்றியத்தில் மேம்படுத்தப்பட்ட என்னும் எழுத்தும் முன் திட்டமிடல் பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் தலைமையில் தொடங்கியது.

மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் மற்றும் இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இப்ப பயிற்சியில் தமிழ் ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கு ஒன்று முதல் மூன்றாவது வரை கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு எவ்வாறு கப்பிப்பது பற்றியும், அரசின் திட்டமான மேம்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் வகுப்பறையினை எவ்வாறு சிறப்பாக செயல்படுத்துவது பற்றியும் கருத்தாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் முன் திட்டமிடல் நடைபெற்றது. 

மேலும் வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தலினை எளிய முறையில் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை கொண்டு செயல்பாடுகளை செய்வது குறித்தும் விரிவாக முன் திட்டமிடல் நடைபெற்றது.

இப்பயிற்சிக்கான முன் திட்டமிடல் குறித்த அனைத்து ஏற்பாடுகளையும், மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு சிவயோகம் செய்திருந்தார்.

இந்நிகழ்வில் அனைத்து கருத்தாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர் முத்துராமன் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments