புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி தொடங்கி நடைபெற்றது.
ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் கள்ளச்சாராய விழிப்புணர்வு பேரணி கிராமிய கரக ஆட்டத்துடன் தொடங்கியது. பேரணியை வட்டாட்சியர் மார்ட்டின் லூர்து கிங், தொடங்கி வைத்தார். பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளான வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரணி முடிவடைந்தது. பேரணியில் பொதுமக்கள் மற்றும் இளைஞர் நலன் கருத்தில் கொண்டு கள்ளச்சாரத்துக்கு எதிராகவும், மது அருந்துதல் மது அருந்தி வாகனம் ஒட்டுதல் மற்றும் போதைப்பொருட்கள் தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு எதிராக விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வட்டாட்சியர் வழங்கினார்.
பேரணியில் கலால்வருவாய் ஆய்வாளர் முத்தரசன், அலுவலர்கள் காமராஜ், வினோத்குமார் மற்றும் அலுவலக அதிகாரிகள், பாரதிதாசன் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.