கறம்பக்குடி அருகே நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு ஊர் முகப்பில் பதாகை வைத்தனர்




கறம்பக்குடி அருகே பல்லவராயன் பத்தை ஊராட்சியில் ஆத்தியடிப்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை, குடிநீர், மயானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதுகுறித்து மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தராத நிர்வாகத்தை கண்டித்து வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அந்த கிராம மக்கள் அறிவித்துள்ளனர். 

இந்த அறிவிப்பு பதாகை ஊர் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஊருக்குள் யாரும் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments