தமிழகத்தில் 10, 11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை 14-10-2024 வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு




தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை 14-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தின் கீழ் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது. 

இந்நிலையில் தேர்வு தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் மகேஷ்  தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கிய ஆலோசனையின்படி, நாளை திங்கள்கிழமை (14.10.2024) அன்று இந்த கல்வி ஆண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம்.  இவ்வாறு அந்த பதிவில் அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார். 

கடந்த முறை 10-ம் வகுப்புக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி நிறைவு பெற்றது. 11-ம் வகுப்பு தேர்வு மார்ச் 4-ம் தேதி ஆரம்பித்து, மார்ச் 25-ம் தேதி முடிந்தது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடந்தது. இம்முறையும் அதுபோலவே தேர்வு தேதிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments