தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை 14-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தின் கீழ் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.
இந்நிலையில் தேர்வு தேதிகள் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் மகேஷ் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கிய ஆலோசனையின்படி, நாளை திங்கள்கிழமை (14.10.2024) அன்று இந்த கல்வி ஆண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட உள்ளோம். இவ்வாறு அந்த பதிவில் அமைச்சர் மகேஷ் கூறி உள்ளார்.
கடந்த முறை 10-ம் வகுப்புக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி நிறைவு பெற்றது. 11-ம் வகுப்பு தேர்வு மார்ச் 4-ம் தேதி ஆரம்பித்து, மார்ச் 25-ம் தேதி முடிந்தது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடந்தது. இம்முறையும் அதுபோலவே தேர்வு தேதிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.