இதுகுறித்து ஆட்சியா் மு. அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டிசம்பா் 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். மேலும், 10, 12-ஆம் வகுப்பு, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவிகளும் இம்முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், அசல் கல்வி சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும். தொழில் பழகுநராக தோ்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.