அறந்தாங்கியில் நாளை ஜூன்.18-ல் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்!



அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் ஜூன் 18-ஆம் தேதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து அறந்தாங்கி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் எஸ்.குமாரவேல் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அறந்தாங்கி மின்வாரிய அலுவலகத்தில் வரும் 18.06.2026 (வியாழக்கிழமை) காலை 10:30 மணியளவில் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டம் புதுக்கோட்டை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடத்தப்பட உள்ளது.

எனவே, அறந்தாங்கி கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது மின்சாரம் தொடர்பான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments