வெளிநாட்டு வாழ்க்கை? 4 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழப்பு



இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் சிலர் சாலை விபத்துகளிலும், உடல் நலக்குறைவாலும், தற்கொலை செய்தும் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில், வளைகுடா நாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் எத்தனைபேர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், கடந்த நான்காண்டுகளில் வளைகுடா நாடுகளில் 28,523 இந்தியர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

    2014-2018-க்கு இடைப்பட்ட இந்த நான்காண்டுகளில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் 12,828 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 7,877 பேரும், குவைத்தில் 2,932 பேரும், ஓமனில் 2,564 பேரும், கத்தாரில் 1,301 பேரும், பஹ்ரைனில் 1,021 பேரும் மரணம் அடைந்துள்ளனர் என்று கூறினார். கடந்த 2016-ம் ஆண்டில் மட்டும் வளைகுடா நாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை மிக அதிகபட்சமாக 6,013 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment