எச்சரிக்கை! கோடியக்கரை கடற்கரை பகுதியில் குளிக்கும்போது கவனம் தேவை



மணமேல்குடி, டிச.12: மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும சார்பாக கோடியக்கரை கடற்கரை பகுதியில் காவல்துறை எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது . மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி தலைமையில்  கோடியக்கரை கடற்கரை பகுதிகளில் ஆழமான கடல் பகுதி இந்த அதிக நீரோட்டமும் ஆபத்தான சூழல் நிறைந்த பகுதியாகும் எனவே ஆழமான பகுதியில் குளிப்பதற்கும் ,படகு சவாரி செய்வதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது என் அடங்கிய வாசகத்துடன் அந்த பலகை வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  எஸ்ஐக்கள் ஜவகர் ,ராஜ்குமார் உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.
நன்றி: தினகரன் 

Post a Comment