பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நட்டு, பராமரிக்க மாணவர்கள் உறுதி



கஜா புயலால் பட்டுக்கோட்டை அடுத்த பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் 100க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தது.
மீண்டும் அந்த பள்ளியில் மரக்கன்றுகள் நட பட்டுக்கோட்டை கோட்டை தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் முடிவு செய்து, பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆகியோர் இணைந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஒரு ஆழ்குழாய் கிணறு பள்ளியில் அமைத்தனர்.

இதையடுத்து, பட்டுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் ஜெயபால் முன்னிலையில் ஒரு  மாணவருக்கு ஒரு மரக்கன்று என்ற வீதம் மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் மாணவர்களால் நடப்பட்டது.

தலைமையாசிரியர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மாவட்ட  ரோட்டரி ஆளுநர் மணிமாறன் ஆழ்குழாய் கிணற்றைபள்ளிக்கு ஒப்படைத்தார். துணை ஆளுநர் ஜெயவீரபாண்டியன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கூத்தலிங்கம், கோட்டை தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் சண்முகானந்தம், பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முடிவில் உதவித் தலைமையாசிரியை கோமதி நன்றி கூறினார். விழாவில்,  800 மாணவர்களுக்கும் வேம்பு, புங்கை, தேக்கு, ரோஸ்வுட் உள்பட 17 வகையான 800 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

கோட்டை தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர் சுந்தரமூர்த்தி கூறுகையில், ‘‘இதுபோன்று இன்னும் நிறைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்க தயாராக இருக்கிறோம்’’ என்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கூத்தலிங்கம் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கஜா புயலால் மரங்கள் வேரோடு  சாய்ந்துள்ளது.

அப்பள்ளிகளை கண்டறிந்து மரக்கன்றுகளை நடுவதற்கு தமிழக அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் முன்வர வேண்டும் என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments