இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - விழி அமைப்பின் (மத்திய மண்டலம்) சார்பில், 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாவது 'இணையவழி கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி' வரும் மே மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் நிலவும் உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் அங்கு சேருவதற்கான வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
சிறப்பு விருந்தினர்
ரியாத் கிங் சவுத் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரும், IWF - விழி அமைப்பின் மத்திய மண்டல துணைச் செயலாளருமான Dr.மீரா மொய்தீன்Ph.D. அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். அவர் சவுதி பல்கலைக்கழகங்களில் உள்ள பாடப்பிரிவுகள், உதவித்தொகை (Scholarships) மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து விரிவான விளக்கங்களை அளிக்க உள்ளார்.
நிகழ்ச்சி விபரங்கள்
தேதி:மே 2, 2026 (சனிக்கிழமை)
நேரம்:சவுதி, கத்தார், குவைத், பஹ்ரைன்: இரவு 7:00 மணி
ஐக்கிய அரபு அமீரகம்: இரவு 8:00 மணி
இந்தியா: இரவு 9:30 மணி
பங்கேற்பாளர்கள்
இந்த இணையவழி நிகழ்ச்சியில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜூம் (Zoom) இணைப்பு: https://us02web.zoom.us/j/85487970722
எதிர்கால தலைமுறையினரின் கல்வி மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வத்துடன் அனைவரும் பங்கேற்குமாறு விழி அமைப்பின் மனிதவள மேம்பாட்டு அணி அழைப்பு விடுத்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.