சோப்பு வாங்கினால் கார், மோட்டார் சைக்கிள் பரிசு தருவதாக கூறி விவசாயியிடம் 2 பேர் பண மோசடியில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விவசாயியான தங்கராசு (45), சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காந்தீஸ்வரன் (32), பேச்சிமுத்து (40) ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
அவர்கள் தங்கராசுவிடம் , நாங்கள் சோப்பு வியாபாரம் செய்வதாகவும், எங்களிடம் சோப்பு வங்கினால் அதில் ஒரு கூப்பன் இருக்கும் என்றும் அந்த கூப்பனில் எந்த பரிசு உள்ளதோ அந்த பரிசை வழங்குவோம் என்றும் கூறியுள்ளனர்.
முதலில் தங்கராசு அவர்களிடமிருந்து சோப்பு ஒன்றை வாங்கி அதில் ஸ்டவ் அடுப்பு இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். தங்கராசுவுக்கு ஸ்டவ் அடுப்பை வழங்கி இந்த பரிசுக்கு மோட்டார் சைக்கிள் விழுந்துள்ளது என்றனர்.
மோட்டார் சைக்கிள் பெற வேண்டுமென்றால் அதற்கு வரியாக ரூ.10 ஆயிரம் நீங்கள் கட்ட வேண்டும் என்று தங்கராசுவிடம் கூறினர். அவர்களது பேச்சில் மயங்கிய தங்கராசு ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும், மறுநாள் தங்கராசு வீட்டிற்கு வந்தனர்.
அவர்கள் தங்கராசுவிடம் ஒருவருக்கு கார் பரிசு விழந்துள்ளதாகவும், அவர் அதற்கான வரி ரூ. 45 ஆயிரத்தை கட்ட முடியாது என்று கூறியதால் உங்களுக்கு அந்த காரை பரிசாக தருவதாக கூறினர்.
நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தங்கராசு அவர்களுக்கு ரூ. 45 ஆயிரத்தை கொடுத்துள்ளார். நாளை காரை பரிசாக தருகிறோம் என்று தெரிவித்து விட்டு இருவரும் சென்றுவிட்டனர்.
மறுநாள் தங்கராசுவை காந்தீஸ்வரன், பேச்சிமுத்து தொடர்பு கொண்டனர். அவர்கள் வரும் வழியில் போலீசார் சோதனை நடத்தியதாகவும், காருக்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 ஆயிரம் செலுத்திவிட்டு செல்லுங்கள் என்று இன்ஸ்பெக்டர் கூறியதாகவும் தங்கராசுவிடம் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் கேட்ட 20 ஆயிரத்தை தந்தால் நாங்கள் காரை கொண்டு வந்து விடுவோம் என்று தங்கராசுவிடம் கூறினர். தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டது தங்கராசுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க அறந்தாங்கி போலீசில் நேரில் சென்று புகார் செய்தார்.போலீசார் தங்கராசுவிடம் நீங்கள் ரூ.20 ஆயிரத்தை கையில் எடுத்து சென்று கொடுங்கள். நாங்கள் பின்னால் வந்து மடக்கி பிடிக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
அதன்படி தங்கராசு ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, காந்தீஸ்வரன், பேச்சிமுத்து ஆகியோர் நின்ற பகுதிக்கு சென்று பணத்தை கொடுக்க இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விவசாயியான தங்கராசு (45), சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காந்தீஸ்வரன் (32), பேச்சிமுத்து (40) ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.
அவர்கள் தங்கராசுவிடம் , நாங்கள் சோப்பு வியாபாரம் செய்வதாகவும், எங்களிடம் சோப்பு வங்கினால் அதில் ஒரு கூப்பன் இருக்கும் என்றும் அந்த கூப்பனில் எந்த பரிசு உள்ளதோ அந்த பரிசை வழங்குவோம் என்றும் கூறியுள்ளனர்.
முதலில் தங்கராசு அவர்களிடமிருந்து சோப்பு ஒன்றை வாங்கி அதில் ஸ்டவ் அடுப்பு இருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். தங்கராசுவுக்கு ஸ்டவ் அடுப்பை வழங்கி இந்த பரிசுக்கு மோட்டார் சைக்கிள் விழுந்துள்ளது என்றனர்.
மோட்டார் சைக்கிள் பெற வேண்டுமென்றால் அதற்கு வரியாக ரூ.10 ஆயிரம் நீங்கள் கட்ட வேண்டும் என்று தங்கராசுவிடம் கூறினர். அவர்களது பேச்சில் மயங்கிய தங்கராசு ரூ.10 ஆயிரத்தை கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும், மறுநாள் தங்கராசு வீட்டிற்கு வந்தனர்.
அவர்கள் தங்கராசுவிடம் ஒருவருக்கு கார் பரிசு விழந்துள்ளதாகவும், அவர் அதற்கான வரி ரூ. 45 ஆயிரத்தை கட்ட முடியாது என்று கூறியதால் உங்களுக்கு அந்த காரை பரிசாக தருவதாக கூறினர்.
நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசியதால் தங்கராசு அவர்களுக்கு ரூ. 45 ஆயிரத்தை கொடுத்துள்ளார். நாளை காரை பரிசாக தருகிறோம் என்று தெரிவித்து விட்டு இருவரும் சென்றுவிட்டனர்.
மறுநாள் தங்கராசுவை காந்தீஸ்வரன், பேச்சிமுத்து தொடர்பு கொண்டனர். அவர்கள் வரும் வழியில் போலீசார் சோதனை நடத்தியதாகவும், காருக்கான போதிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.20 ஆயிரம் செலுத்திவிட்டு செல்லுங்கள் என்று இன்ஸ்பெக்டர் கூறியதாகவும் தங்கராசுவிடம் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் கேட்ட 20 ஆயிரத்தை தந்தால் நாங்கள் காரை கொண்டு வந்து விடுவோம் என்று தங்கராசுவிடம் கூறினர். தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டது தங்கராசுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து 2 பேரையும் கையும், களவுமாக பிடிக்க அறந்தாங்கி போலீசில் நேரில் சென்று புகார் செய்தார்.போலீசார் தங்கராசுவிடம் நீங்கள் ரூ.20 ஆயிரத்தை கையில் எடுத்து சென்று கொடுங்கள். நாங்கள் பின்னால் வந்து மடக்கி பிடிக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.
அதன்படி தங்கராசு ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, காந்தீஸ்வரன், பேச்சிமுத்து ஆகியோர் நின்ற பகுதிக்கு சென்று பணத்தை கொடுக்க இருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.