சவூதி ஜித்தாவில் 5 வது சர்வதேச புத்தக கண்காட்சி!



சவூதி அரேபியா ஜித்தாவில் வரும் டிசம்பர் 11 ஆம் தேதி முதல் ஐந்தாவது சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது.

ஜித்தா அபுஹூர் பகுதியில் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த கண்காட்சியில், 40 நாடுகளிலிருந்து 400 க்கும் மேற்பட்ட பதிப்புகள் இடம்பெறுகின்றன.

மேலும் 3லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெறும்.

மேலும் புத்தக கண்காட்சியை ஒட்டி, எழுத்தாளர்களின் கருத்தரங்குகள், பல்வேறு ஓவியங்கள், பல்சுவை கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளும் இதில் இடம்பெறுகின்றன.

சுமார் 200 எழுத்தாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

நன்றி :- இந்நேரம் 247

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments