மீமிசலில் நெல்கொள்முதல் நிலையம் மாவட்ட ஆட்சியர் தகவல்



புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 1) முதல், மேலும் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.
மாவட்டத்தில் பரவலாக நெல் அறுவடை நடைபெற்று வருவதால், கறம்பக்குடி வட்டத்தில் குரும்பிவயலிலும், ஆவுடையாா்கோயில் வட்டத்தில் ஆவுடையாா்கோயில், பொன்பேத்தி, மீமிசல் ஆகிய இடங்களிலும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

அருகமையில் உள்ள நெல் விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை இந்தக் கொள்முதல் நிலையங்களில் வழங்கிப்பயன்பெறலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments