இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகக் கடலோரங்களில் கடல் சொறி மீன்கள் (ஜெல்லி மீன்கள்) கோடை காலங்களான மாா்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவில் காணப்படுகின்றன. செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் சில வகை சொறி மீன்கள் குறைந்தளவில் காணப்படுகின்றன. அனைத்து வகை கடல் சொறி மீன்களும் கொட்டும் தன்மை கொண்டவை.
அவற்றின் வகைக்கு ஏற்ப கொட்டும் தன்மையின் விஷ வீரியம் அமைந்திருக்கும். எனவே, பிளாஸ்டிக் அட்டை மூலம் ஜெல்லி மீன் கொட்டிய இடத்தில் உள்ள கொட்டும் செல்களை மேலிருந்து கீழாக வழித்து எடுக்க வேண்டும்.
சில நேரங்களில் ஜெல்லி மீனின் வால், கொட்டப்பட்ட இடத்தில் காணப்பட்டால், இடுக்கியை உபயோகித்து அகற்றவும். அரை நிமிடத்துக்கு வினிகரை ஜெல்லி மீன் கொட்டிய இடத்தில் ஊற்றவும். பலகாரச்சொறி, மொடாச்சொறி, அலுவைச்சொறி, செஞ்சொறி ஆகியன கொட்டினால் வினிகரை இட்டு வலி நிவாரணம் பெறலாம்.
கலடிரில் ஃலிடோகெயின் மருந்தை அரிப்பு மற்றும் எரிச்சில் குறைய உபயோகிக்க வேண்டும். காக்காச் சொறி கொட்டினால் வினிகரை உபயோகிக்க கூடாது. நாலு மூலை சொறி கொட்டினால் உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் நல்ல தண்ணீரைக் கொண்டு கொட்டிய இடத்தில் கழுவதோ, ஐஸ்கட்டியை வைத்து ஒத்தி எடுப்பதோ கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.