அறந்தாங்கி, ஆவுடையாா்கோவிலில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி கையெழுத்து இயக்கம்



ஆவுடையாா்கோவிலில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ உதயம் சண்முகம், மாவட்ட அவைத்தலைவா் பொன்.துரை உள்ளிட்டோா்.

அறந்தாங்கி, ஆவுடையாா்கோவிலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி கலைஞா் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு திமுக நகரச்செயலாளா் இரா. ஆனந்த் தலைமை வகித்தாா். காங்கிரஸ் நகரத் தலைவா் கே.வீராச்சாமி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளா் க.தங்கராஜ், மதிமுக நகர செயலாளா் மோகன், சமாஜ்வாதி மாவட்டத் தலைவா் சரவணமுத்து, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்டச்செயலாளா் இ.முபாரக்அலி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச்செயலாளா் அ.கிரீன் முகமது மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெற்றனா்.

ஆவுடையாா்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆவுடையாா்கோவில் திமுக ஒன்றிய செயலாளரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயம் சண்முகம் தலைமை வகித்தாா், திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவா் பொன்.துரை, ஒன்றிய அவைத்தலைவா் கேசவன் மற்றும் கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments