நாகுடி அருகே மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலி.!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டாணியை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 57). இவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்காக நேற்று நாகுடி அருகே உள்ள சிறுவரை வெள்ளாற்று செங்கரையில் வயல் பகுதிக்கு ஓட்டி சென்றார்.


அப்பகுதியில் உள்ள புளியமரத்திற்கு அருகே ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென அப்பகுதியில் இடி, மின்னல் ஏற்பட்டது. இதில் மின்னல் தாக்கி 16 ஆடுகள் செத்தன. இதைக்கண்ட ஆறுமுகம், செத்து கிடந்த ஆடுகளை கண்டு கதறி அழுதார். 

இது பற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் அங்கு வந்து செத்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். இதையடுத்து உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் அந்த ஆடுகள், அங்குள்ள ஆற்றங்கரை பகுதியில் புதைக்கப்பட்டன.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments