மணமேல்குடியில் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் நலச்சங்க கூட்டம்.!



மணமேல்குடியில் புதுக்கோட்டை மாவட்ட பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ், துணை தலைவர் ஆரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், மீனவர்கள் சிறு சேமிப்பு திட்டத்தில், அனுமதி கிடைக்காததால் புதிய உறுப்பினர்கள் பணம் கட்ட முடியவில்லை. 

இது குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி நகலை மீன்வளத்துறையிடம் கொடுத்தும், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இது சம்பந்தமாக உடனடியாக மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுப்பது, என்று முடிவு செய்யப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம் சோழியக்குடி விசைப்படகு மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்ட கடல்பகுதியில் வந்து தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதனை அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க துணை செயலாளர் முகம்மது மைதீன், பொருளாளர் பசுபதி உள்பட மீனவர்கள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments