புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய இதுவரை 15,338 வாகனங்கள் பறிமுதல்.!



கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலில் உள்ள நிலையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டும், அவ்வாறு பெறாமல் வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி ஏற்கனவே அறிவித்திருந்தார்.


இந்த நிலையில் புதுக்கோட்டை சிப்காட் அருகே திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அந்த வழியாக வந்த வாகனங்களை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் முறையாக அனுமதி பெற்றுள்ளனரா? வாகனங்கள் அனுமதி பெறப்பட்டதா? என்பதை பார்வையிட்டார். மேலும் பஸ்சில் ஏறியும் சோதனை மேற்கொண்டனர். 


பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கின் போது மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில் விதிகளை மீறியதாக 8,768 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15,884 பேர் கைது செய்யப்பட்டு, 15,338 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்று வாகன சோதனை செய்து விதிகளை மீறுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் முருகப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments