ஆக்ஸிஜன் அளவு 90 சதவிகிதமானால் டேஞ்சர்! கொரோனாவுக்கு எப்படியெல்லாம் சிகிச்சை அளிக்கிறார்கள்? #covidprotocol




சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட் 19 (SARS-CoV-2 ) எனப்படும் கொரோனா நோய்க்கிருமி உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரோனா நோய் தொற்றுக்கு மருத்துவமனைகளில் என்னவிதமான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என்கிற கேள்வி அனைவரிடத்திலும் தொக்கி நிற்கும். கொரோனா நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் , வைரஸ் கிருமியால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் விதத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுகின்றன.

காய்ச்சல், தொண்டை வலி, வறட்டு இருமல், சுவாசப் பிரச்னை உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் (SPO2) அளவு கணக்கிடப்படும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எவ்வளவு ஆக்சிஜனை உடல் செல்களுக்கு எடுத்துச் செல்கிறது என்பத்தைக் கண்டறியும் பரிசோதனை இது. சாதாரணமாக, ஆரோக்கியமான ஒருவரின் உடலில் ஆக்சிஜனின் அளவு 95 முதல் 100 % இருக்கும். ஆனால், இந்த அளவு 94 % க்கும் கீழே குறைந்தால் பிரச்னை தான். நுரையீரலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். கொரோனா நோய் தோற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை எளிதாக அறிய உதவும் பரிசோதனை இது. உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தாலே உடல் சோர்வு ஏற்படும். படிக்கட்டுகள் ஏறும்போது அதிகளவு மூச்சு வாங்கும்.




ஆனால், பி.சி.ஆர் பரிசோதனையே கொரோனா நோய்த் தொற்றை உறுதி செய்யும் துல்லியமான பரிசோதனை ஆகும். பி.சி.ஆர் சோதனையில் நோய் தொற்று உறுதியானதும், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவின் அடிப்படையில் கொரோனா நோயாளிகள் பிரிக்கப்படுகிறார்கள். ஆக்சிஜனின் அளவு 94 % க்கும் அதிகமாக இருந்தால் லேசான பாதிப்பு என்றும் 90 - 94 % ஆக இருந்தால் மிதமான பாதிப்பு எனவும் 90 % க்கும் கீழே குறைந்தால் அது மோசமான பாதிப்பு என்றும் வகைப்படுத்தப்பட்டு அதனடிப்படையில், தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா உறுதியானதும், மார்பக CT ஸ்கேன் செய்யப்படுகிறது. கொரோனா வைரஸ் நோயின் தீவிரத்தை அறிவதற்கு, நுரையீரல் பாதிப்பின் அளவை அறிந்துகொள்ள சி.டி.ஸ்கேன் பரிசோதனை உதவுகிறது. CT ஸ்கேன் முடிவில் நுரையீரல் பாதிப்பு 25 % க்கும் குறைவாக இருந்தால் அவர்கள் லேசான பாதிப்பு என்றும் 25 - 75 % இருந்தால் மிதமான பாதிப்பு என்றும் 75 - 100 % பாதிக்கப்பட்டிருந்தால் மோசமான பாதிப்பு என்றும் கருதப்படுகிறது. பிறகு, அதற்கேற்ற வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதையடுத்து, ரத்தத்தில் சி - ரியாக்டிவ் புரத அளவு, லிம்போசைட்டுகள் அளவு, ஃபெரிடின், லாக்டிக் ஆசிட் டீஹைட்ரஜனேஸ் டி - டைமர் ஆகியவற்றின் அளவு கண்டறியப்படும். இந்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில் அடுத்த கட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். கொரோனா சிகிச்சைக்கு முன்பு செய்யப்படும் அடிப்படை பரிசோதனை முறை இவைதான்.

கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்களுக்கு 500 மில்லி கிராம் பாராசிட்டமால் மாத்திரை தினமும் மூன்று முறை அளிக்கப்படுகிறது. தேவைக்கேற்ப இருமலைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள் வழங்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த 500 மி.கி விட்டமின் சி மாத்திரை ஒரு நாளைக்கு ஒரு முறையும், 50 மி.கி சிங்க் மாத்திரை ஒரு நாளைக்கு இரண்டு முறையும் கொடுக்கப்படும். ஒமெப்ரஸோல் மாத்திரை ஒரு நாளைக்கு இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments