கோபாலப்பட்டிணத்தில் திடீரென பெய்த பலத்த மழை.!




கோபாலப்பட்டிணத்தில் திடீரென பெய்த பலத்த மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம், மீமிசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 08-08-2020  சனிக்கிழமை இரவு பெய்த  மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 8:00 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையினால் இரவில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. மழையின் போது இடையில் மின்சாரம் திடீரென தடை ஏற்பட்டது. இரவு 10 மணி முதல் லேசாக மழை வீட்டு வீட்டு பெய்தது 

இந்தநிலையில் திடீரென்று நேற்று இரவு 8 மணி அளவில் பலத்த மழை பெய்தது . இந்த மழையால் கோபாலபட்டிணத்தில் உள்ள நீா்நிலைகள், நீா்வரத்து ஓடைகளில்,சாலைகளில் சாலைகளில் மழைநீா் தேங்கி காணப்பட்டது. மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தொடர்ச்சியாக வெயில் வாட்டி வந்த நிலையில், திடீரென பெய்த இந்த மழை மண்ணை மட்டுமின்றி கோபாலப்பட்டிணம் மக்களின் மனதையும் குளிர வைத்து சென்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments