தேசிய பெண் குழந்தைகள் தின விருதுக்கு விண்ணபிக்கலாம்.




 தேசிய பெண் குழந்தைகள் தின தமிழக அரசின் விருதுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.. புதுக்கோட்டை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சாதனை புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி 24 ல் மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ ஒரு லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. 

விருது மற்றும் பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கு  வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும்  பெண் குழந்தைகள், பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஓழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான தனித்துவமான சாதனை  செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தி இருத்தல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் ஆகியவற்றில் வீர தீர செயல் புரிந்த தகுதியுடைய பெண் குழந்தைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சமூகநல அலுவலகத்தில் வரும் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் இத்தகவலை தெரிவித்துள்ளார். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments