வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 80 லட்சம் பேர் வெளிநாடுகளில் வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சமீபத்திய கணக்கீடு தெரிவிக்கிறது.
ஒரு நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பட்டியலில் மெக்ஸிகோ, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இந்நாடுகளில் பிறந்த ஒருகோடியே 10 லட்சம் பேர் வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரிசையில் சீனாவில் பிறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாகும். சிரியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை 80 லட்சமாக உள்ளது.
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தவர்கள் 2020 பட்டியலை ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக விவகாரத் துறை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) 35 லட்சம் இந்தியர்களும், அமெரிக்காவில் 27 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 25 லட்சம் இந்தியர்களும் வாழ்கின்றனர். தவிர ஆஸ்திரேலியா, கனடா, குவைத், ஓமன், பாகிஸ்தான், கத்தார், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கும் இந்தியர்கள் புலம் பெயர்ந்துள்ளதாக அந்த பட்டியல் தெரிவிக்கிறது.
கடந்த 2000-வது ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் அனைத்து நாடுகளுக்கும் மக்கள் புலம் பெயர்வது அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஒரு கோடி இந்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாக சிரியா,வெனிசுலா, சீனா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் புலம் பெயர்ந்துள்ளனர்.
அமெரிக்கா மீது ஆர்வம்
உலக நாடுகளில் பெரும்பாலானோரை ஈர்க்கும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. 2020-ம் ஆண்டில் 5 கோடியே 10 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இது மொத்தமாக புலம் பெயர்ந்தவர்கள் எண்ணிக்கையில் 18 சதவீதமாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.