கோபாலப்பட்டிணத்தில் கழிவுநீர் செல்லும் வாய்க்காலை சரிசெய்திட வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை 19.01.2020 செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் மக்கா தெரு 1-வது வீதியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மழைநீர் வெளியேற முடியாமல் வீட்டிற்குள் புகுந்தது. இந்நிலையில் தேங்கி இருந்த மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தற்காலிகமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் அப்பகுதி உள்ள வயதானோர் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் சாலைகளின் குறுக்கே இரண்டு பக்கமும் தொலைபேசி கம்பம் மற்றும் கயிறு கட்டி வடிகால் வசதியை சீரமைக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் ஊராட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.வாய்க்காலை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.