புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தை அடுத்த மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் உடையப்பன். விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு சத்யஸ்ரீ(வயது 10), சுசீலா(7) என 2 மகள்கள். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வந்தனர்.
தற்போது கொரோனா விடுமுறை காரணமாக வீ்ட்டில் இருந்து வந்தனர். கடந்த 4 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. மழை காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. உடையப்பன் வீட்டு மண்சுவரும் மழையில் நனைந்து ஈரமாக காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை தனது வீட்டு சுவற்றின் ஓரமாக சத்யஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது மண் சுவர் திடீரென இடிந்து சத்யஸ்ரீ மீது விழுந்தது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக் கிடந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக சம்பவ இடத்தை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன் ஆகியோர் பார்வையிட்டு சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.