குறைக்கப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணம், இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு ரயில் நிலையத்துக்கும் இடையே குறைக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை முதல் விமானம் நிலையம் வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை, அண்மையில் விம்கோ நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட்டது. மெட்ரோ ரயில்களில் பயணக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதைக் குறைக்க வேண்டும் எனவும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று முதல்வர் பழனிசாமி மெட்ரோ ரயில் கட்டணத்தை ரூ.20 வரை குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். குறைக்கப்பட்ட கட்டணம் இன்று (22-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு ரயில் நிலையங்களுக்கும் இடையே குறைக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என்ற விவரத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, விமான நிலையத்தில் இருந்து மீனம்பாக்கம் வரை ரூ.10-ம், நங்கநல்லூர் மற்றும் கிண்டி வரை ரூ.20-ம், கிண்டி, சின்னமலை, சைதாப்பேட்டை, நந்தனம் மற்றும் தேனாம்பேட்டை வரை ரூ.30-ம், ஏஜி-டிம்எஸ், ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர் நீதிமன்றம் மற்றும் மண்ணடி வரை ரூ.40-ம், தியாகராயா கல்லூரி, தண்டையார்பேட்டை, புதிய வண்ணாரப்பேட்டை, டோல்கேட், காலடிப்பேட்டை, திருவொற்றியூர் மற்றும் விம்கோ நகர் வரை ரூ.50-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் இருந்து ஈக்காட்டு தாங்கல், அசோக் நகர், வடபழனி, அரும்பாக்கம் வரை ரூ.30-ம், சிஎம்பிடி பேருந்து நிலையம், கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, நேரு பூங்கா, எழும்பூர் வரை ரூ.40-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.