கோபாலப்பட்டிணம் PHH & AAY ரேஷன் கார்டுதாரர்களே கவனம்: பெயர் நீக்கத்தைத் தவிர்க்க டிசம்பர் 31-க்குள் இ-கேஒய்சி (e-KYC) கட்டாயம்!



தமிழகத்தில் உள்ள முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா (PHH & AAY) குடும்ப அட்டைதாரர்களுக்கான இ-கேஒய்சி (e-KYC) பதிவை முடிப்பதற்கான காலக்கெடுவை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள கோபாலப்பட்டிணம் PHH & AAY ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:
 யாரெல்லாம் செய்ய வேண்டும்?: PHH மற்றும் AAY வகை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள்.
 வயது வரம்பு: 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்.
 நிபந்தனை: கடந்த இரண்டு ஆண்டுகளாக நியாயவிலைக் கடைகளில் கைரேகை (Biometric) பதிவு செய்யாதவர்கள் இந்த நடைமுறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
 கடைசி தேதி: 31.12.2025

பெயர் நீக்கம் செய்யப்பட வாய்ப்பு
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரல் ரேகை பதிவு செய்யத் தவறினால், அந்த குறிப்பிட்ட நபரின் பெயர் குடும்ப அட்டையிலிருந்து நீக்கம் செய்யப்படும் என்று அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. போலி உறுப்பினர்களைக் கண்டறியவும், தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்
தகுதியுள்ள பயனாளிகள் தங்கள் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைக்கு (Ration Shop) சென்று, விற்பனையாளரின் உதவியுடன் இந்த இ-கேஒய்சி சரிபார்ப்பை உடனடியாக முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கவும், ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் பொதுமக்கள் முன்கூட்டியே இந்த பதிவை முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments