கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் கவனத்திற்கு... GPM மீடியாவின் அன்பான வேண்டுகோள்!



தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோபாலப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் குறிப்பாக வயதானவர்கள் முடிந்தளவு வெளியூர் மற்றும் தொலைதூர பயணங்கள் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள்.

அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும்போதும், வெளியூர் செல்லும் போதும் உங்கள் வீட்டு குழந்தைகள் நலனுக்காகவும், உங்கள் குடும்ப நலனுக்காகவும், உங்கள் ஊர் நலனுக்காகவும், உங்கள் ஊரில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். 

வெளியே சென்று வீட்டிற்குள் நுழையும் முன் கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள். 

மருத்துவ தேவைகளுக்காக வெளியூர் செல்லும்  பொது மக்கள் தயவு செய்து முக கவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டுகிறோம். 

மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்திருக்கும் வழிமுறைகளை பின்பற்றினால் நமது குடும்பத்தையும், உறவினர்களையும் நமது ஊரையும்  கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். 

எனவே மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களை GPM மீடியா வாசகர்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடித்து கொரோனா பாதிப்பில் இருந்து அனைவரும் பாதுகாத்து கொள்ளும்படி GPM மீடியா சார்பில் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முகக்கவசம் தற்பொழுது உயிர் கவசம்

அன்புடன்.... 
GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
ஆவுடையார் கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments