மே 2-ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 2-ம் தேதி எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கையின் போது பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.
அதில், வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழையும் கட்சி முகவர்கள், வேட்பாளர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து அதில் ’நெகட்டிவ்’ சான்றிதழ் கட்டாயம் அல்லது கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்தியிருக்க வேண்டும் அதற்கான சான்றிதழ் கட்டாயம். கொரோனா பரிசோதனை செய்யாத அல்லது தடுப்பூசி 2 டோஸ் போட்டுக்கொள்ளாத கட்சி முகவர்கள், வேட்பாளர்களுக்கு வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதியில்லை. இந்த சான்றிதழ் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு 48 மணிநேரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது மாவட்ட தேர்தல் அதிகாரியின் பொறுப்பு
வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே பொதுமக்கள் கூட அனுமதியில்லை.
வாக்கு எண்ணும் மையத்தில் கொரோனா தடுப்பு விதிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.