புதுக்கோட்டை மாவட்டம்,
திருமயம் வட்டம்,
அரிமளம் பகுதியின் 15 ஆண்டுகால வறட்சிக்கு காரணமான வனத்துறை மற்றும்
வனத்தோட்டக்கழகத்தின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து அரிமளம் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர் சங்கம்,
மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்பு செய்து மறியல் போராட்டம்
நடைபெற்றது.
டைமன்ட் கண்ணன்
இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். குமார் முன்னிலை வகித்தார்.
வனப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தடுப்பணைகள் அகற்றி மழைநீர்
தேங்கு குழிகளை இயற்கை மழைநீர் வழித்தடத்துடன் இணைக்க வேண்டும், அரிமளத்தை ஒட்டிய வனப்பகுதியில் நடைபெற்றுவரும் உழவுப்பணிகளை
உடனடியாக நிறுத்த வேண்டும், அரிமளம் பேரூராட்சி வனப்பகுதியை ஒட்டி வளர்க்கப்படும் யூகலிப்டஸ்
மரங்களை முற்றிலுமாக அகற்றி சமூக காடுகளாக்கி, வன விலங்குகள்
மற்றும் பல்லுயிரும் வாழ வழி செய்ய வேண்டும், பேரூராட்சி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காவண்ணம் வடிகால்
வசதியினை போர்க்கால அடிப்படையில் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட அரிமளம் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை கூறி கோஷமிட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.