முத்துக்குடாவில் நாளை அக்டோபர் 2 நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் கிராம சபை கூட்ட அழைப்பிதழ்!!



முத்துக்குடாவில் நாளை 02/10/2021 சனிக்கிழமை நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 2.10.2021 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் முத்துக்குடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி. ரா.சீதாலெட்சுமி MSc,.BEd., தலைமையிலும், திருமதி.பிரியாகுப்பராஜா ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி.கமர்நிஷா அபுதாஹீர் அவர்கள், திரு.பெ.ரமேஷ் அவர்கள், மு.உதயகுமார் ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களும், சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

உறுப்பினர்கள்:

2.சித்திநிஜாமியா, 3.அபுதாஹீர் 4.மும்தாஜ் பேகம், 5.ரஜயு நிஜா, 6.பெனாசீர் பேகம், 7.சாதிக் பாட்ஷா, 8.அன்வர் பாட்ஷா, 9.மல்லிகா, 10.சிங்காரி, 11.லெத்திப், 12.பிரேமா

யா.ஸ்டெல்லா, ஊராட்சி செயலர்.

இவண்,
ரா.சீதாலெட்சுமி MSc,.BEd.,
ஊராட்சி மன்ற தலைவர், 
உதயம் தாஹீர்
துணைத்தலைவர்,
நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி

கூட்டப்பொருள்கள்:
  • கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் குறித்து விவாதித்தல்.
  • ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக.
  • குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக.
  • ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.
  • இதர பொருள்கள்.
  • கூட்டத்திற்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து வரவும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments