கச்சத்தீவு அருகே நடுக்கடலில் இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு கற்கள் வீசி தாக்குதல்




ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவ்வாறு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை கொண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் வலைகளையும் அறுத்துக் கடலில் வீசி உள்ளனர். இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு பயந்து அப்பகுதியில் மீன் பிடிக்காமல் ராமேசுவரத்திற்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்தனர். இலங்கை கடற்படை தாக்குதலால் நேற்று காலை ராமேசுவரம் மீனவர்கள் மிகவும் குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பினார்கள். இலங்கை கடற்படை தாக்குதல் மற்றும் விரட்டியடிப்பால் ராமேசுவரத்தை சேர்ந்த பெரும்பாலான படகுகளுக்கு அதிகமான நஷ்டம் ஏற்பட்டு உள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments