கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார கழிவறை!
கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பகுதியில் பராமரிப்பின்றி கிடக்கும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார கழிவறையை சரி செய்ய கோரிக்கை வைக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பகுதியில் பெண்கள் பயன் பெரும் வகையில் பொது கழிவறை கட்டப்பட்டுள்ளது.
இந்த கழிவறையானது தண்ணீர் வசதியின்றியும், பராமரிப்பின்றியும் மக்கள் உபயோகப்படுத்த இயலாத நிலையிலும் மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டும் காணப்படுகிறது.
கழிப்பறை பராமரிப்பு இல்லாததால் சிறியவர்கள் முதல் இளம்பெண்கள் ,பெரியவர்கள் என அனைவரும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை உருவாகியுள்ளது.இதனால் சுகதாரக்கெடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே இதுகுறித்து நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மீண்டும் மக்கள் பயன்பெறும் வகையில் கழிவறையை சரி செய்து பராமரிக்க வேண்டும் எனவும் கிராம மக்களிடையே கழிவறை பயன்பாட்டின் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் GPM மீடியா சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.