பெரிய மீன் மார்க்கெட்
மாவட்டத்திலேயே மிகப்பெரிய மீன் மார்க்கெட் இங்குதான் உள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு நாள்தோறும் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனை வாங்கவும், விற்பனை செய்யவும் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
சாலையோரத்தில் நிற்கும் அவலம்
மிகவும் பரபரப்பான பகுதியாக இருக்கும் கட்டுமாவடியில் தற்போது சாலையோரத்தில் ஒரு சிறிய பஸ் நிறுத்தம் மட்டுமே உள்ளது. இதனால் தினசரி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்வோர் வெயிலிலும், மழையிலும் சாலையோரத்திலேயே பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
கழிப்பிட வசதி இல்லை
வெளியூர்களிலிருந்து வரும் பயணிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பிட வசதி இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், பஸ்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் ஆயிரக்கணக்கான வணிகர்கள் வந்து செல்லும் கட்டுமாவடியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். பயணிகள் அமருவதற்கான வசதி, சுத்தமான குடிநீர் மற்றும் நவீன கழிப்பிட வசதிகளுடன் இந்த பஸ் நிலையத்தை அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.