கோபாலப்பட்டிணத்தில் ஏப்.24 நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம்!




கோபாலப்பட்டிணததில் ஏப்ரல் 24 ஞாயிறு அன்று நாட்டாணி புரசக்குடி ஊராட்சியின் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியின் சிறப்பு கிராம சபைக் கூட்டம் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் கோபாலப்பட்டிணம் சமூக சேவை மைய வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,.BEd., தலைமையிலும், திருமதி.பிரியாகுப்புராஜா ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருமதி.கமர்நிஷா அபுதாஹீர் அவர்கள், திரு.பெ.ரமேஷ் அவர்கள், திரு.மு.உதயகுமார் ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.

 கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும், ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களும், சுய உதவிக் குழுவினரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கூட்டப்பொருள்கள்
கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக. குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல் தொடர்பாக. ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.

இதர பொருள்கள்.
கூட்டத்திற்கு வரும் அனைவரும் முக கவசம் அணிந்து வரவும்.

இவண்,
ரா.சீதாலெட்சுமி பஷீர்அகமது MSc,BEd.,
ஊராட்சி மன்ற தலைவர்,

உதயம் அபுதாஹீர்
துணைத்தலைவர்

உறுப்பினர்கள்:
சித்தி நிஜாமியா, அபுதாஹீர் மும்தாஜ் பேகம், ரஜபு நிஜா, பெனாசீர் பேகம்
சாதிக் பாட்ஷா, அன்வர் பாட்ஷா, மல்லிகா, சிங்காரி, லெத்திப், பிரேமா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments