கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் கோட்டைப்பட்டினத்தில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதில் கார் ஒன்று சேதமடைந்தது.
ஆலமரம் சாய்ந்தது
புதுக்கோட்டை மாவட்டம், கடலோர பகுதிகளான மீமிசல், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வயல் வரப்புகளில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது.
இந்நிலையில் இப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது. இதில் ஆலமரத்தின் அடியில் நிறுத்தி வைத்திருந்த கார் மீது மரம் விழுந்தது.
பள்ளியை சூழ்ந்த மழைநீர்
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார் மீது விழுந்த ஆலமரத்தை அப்புறப்படுத்தி காரை வெளியே எடுத்தனர். இதில் காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. மழைநீர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியை சூழ்ந்து கொண்டது. இதனால் மாணவிகள் உள்ளே செல்ல மிகவும் சிரமப்பட்டனர். பின்னர் மோட்டார் மூலம் தேங்கி கிடந்த தண்ணீரை ஊராட்சி நிர்வாகத்தினர் வெளியேற்றினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.