கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 5-வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை




    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீன்வளத் துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்தநிலையில் இப்பகுதியில் தொடர்ந்து காற்று வீசி வருவதால் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 5-வது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments