1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வீட்டுப்பாடம்
1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனை நடைமுறைப்படுத்தும் வகையில் 1, 2-ம் வகுப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிகளில் பறக்கும் படை உறுப்பினர்களை கொண்டு ஆய்வு செய்து தொகுப்பு அறிக்கை அளிக்க அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த 2018, 2021 மற்றும் நடப்பு ஆண்டுகளில் கேட்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதுதொடர்பாக சில மாவட்டங்களில் எந்த ஒரு அறிக்கையும் பெறப்படாமல் இருப்பதாகவும், தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதனை வலியுறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆய்வு செய்ய உத்தரவு
இந்தநிலையில் கடந்த 3 மாதங்களில் பள்ளிகளில் 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஆய்வுசெய்ய வேண்டும் என்று மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
ஆய்வில் எந்தெந்த பள்ளிகளில் அவ்வாறு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை அறிக்கையாக குறிப்பிட்டு, வட்டாரக்கல்வி அலுவலர்கள் வழங்கவும், அதனை பெற்று பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் அரியலூர் மாவட்ட கல்வித்துறைக்கு, இதுபோன்ற ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கையை எடுக்க வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.