கத்தார் போக போறீங்களா….? இனி இது கட்டாயம் கொண்டு போகணும்…. முக்கிய அறிவிப்பு….!!!!






கத்தாரின் பயணக் கொள்கையில் பொது சுகாதார அமைச்சகம் அடிப்படை மாற்றத்தை செய்துள்ளது. இதன்படி, செப்டம்பர் 4 முதல், வெளி நாடுகளில் இருந்து கத்தாருக்கு வரும் பயணிகள், ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்குச் செல்லத் தேவையில்லை. ஆனால் பார்வையாளர்களுக்கு பயணம் செய்த 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பி.சி.ஆர். நெகடீவ் சான்றிதழ் கட்டாயமாக இருக்கும். கோவிட் -19 சோதனை செய்தவர்கள் நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும்.



இந்த மாற்றம் செப்டம்பர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. கோவிட் நோயின் நிலைக்கு ஏற்ப நாடுகளை வகைப்படுத்துவதை நிறுத்தியுள்ளதாக பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 கத்தாரின் பயணம் மற்றும் திரும்பும் கொள்கை நாட்டின் கோவிட் கட்டுப்பாட்டில் ஒரு முக்கியமான படியாகும் என்றும் கத்தாருக்குள் நுழையும் பயணிகளுக்கு கடுமையான கொள்கையை அமல்படுத்துவது கோவிட் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மிகவும் உதவியாக இருப்பதாக பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments